இயற்கை வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, இயற்கை வேளாண் சாகு-படி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.


கெங்கவல்லி வேளாண் துறையின் அட்மா திட்-டத்தின் கீழ், இயற்கை வேளாண் சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நேற்று, 74.கிருஷ்ணாபுரத்தில் வேளாண் உதவி இயக்-குனர் மோகனசரிதா தலைமையில் நடந்தது. முகாமில், இயற்கை வேளாண் சாகுபடி முறையால் ஏற்படும் நன்மை, பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், இயற்கை கரைசல் தயாரிப்பு முறைகள், இயற்கை வேளாண் சாகுபடி, மீன் அமிலம் தயாரிக்கும் முறைகள் குறித்து, விவசா-யிகளுக்கு எடுத்துரைத்தனர்.உதவி வேளாண் அலுவலர் நந்தகுமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கர் மற்றும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement