'ஆன்லைன் டிரேடிங்'கில் நஷ்டம் சிவகங்கை வாலிபர் விபரீத முடிவு
பனமரத்துப்பட்டி: ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டதால், சிவகங்கை வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்-குமார், 32. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். சேலம் தாசநாயக்கன்பட்டி, சவுடாம்-பிகா நகரில் வாடகை வீட்டில் தங்கி, நண்பருடன் சேர்ந்து பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு பிறகும் செந்தில்குமார் தங்கியுள்ள வீடு, உள்பக்கமாக பூட்டியே இருந்தது. அக்கம்பக்கத்தில் இருந்த-வர்கள் சந்தேகப்பட்டு, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, மின்விசிறியில் கயிறு மூலம் துாக்கிட்டு செந்தில்குமார் சடலமாக தொங்-கினார்.ஆன்லைன் டிரேடிங் செய்ததால், லட்சக்க-ணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் தொல்லை அதிகமாகிவிட்டதால், இந்த முடிவை எடுத்தேன். யாரும் வருத்தப்படவேண்டாம் என அவர், எழு-திய கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை கைப்-பற்றி, மல்லுார் போலீசார் விசாரித்து வருகின்-றனர்.
மேலும்
-
அணைகள் நீர்மட்டம்
-
மாண்போடு நடக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நடக்கிறது சட்டசபை; ஸ்டாலின் பேட்டி
-
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… அமைதி காத்த இபிஎஸ்; ஆத்திரத்துடன் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்!
-
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்தது நெல்லை கோர்ட்
-
100 நாளில் 904 ரெய்டு, விதி மீறிய 322 ஹோட்டல் மூடல்; தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு துக்காராம்
-
தமிழக இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவிப்பு