பெண்ணை தாக்கிய 4 பேர் கைது
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே எதிர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் துரை, 37. தச்சுத்தொழிலாளி. இவர், தன் மனைவி மீனாவின் தோழியான, 40 வயது பெண்ணை, தனிமையில் சந்திக்க அழைத்து, அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், அப்பெண் தான், தன்னை அழைத்ததாக, மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் துரை மாற்றி கூறி-யுள்ளார்.
இதனால் கடந்த, 30ம் தேதி, துரை மற்றும் அவ-ரது குடும்பத்தினர், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, ராயக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் அப்பெண் புகார் செய்தார். அதன்படி துரை, அவ-ரது மனைவி மீனா, 28, தாய் வள்ளி, 55, தந்தை முருகன், 58, ஆகிய, 4 பேரை, நேற்று கைது செய்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு
Advertisement
Advertisement