காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு

காரம் என்பது உணவிற்கு சுவை சேர்க்கும் ஒரு முக்கியமான மசாலா. இது உணவை சுவை யாக மாற்றுவதோடு உடலுக்கு சில நன்மைக ளையும் தருகிறது.
ஆனால், அதிகப்படியான காரத்தை உட் கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. இந்தப் பதிவில் அதிகமாக காரம் சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய முக்கியமான ஆபத்துகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

நம் வீட்டின் சமையலறைகளில் நீக்கமற நிறைந்திருக்கும் மிளகாய் தூளின் காரமான சுவை மற்றும் துாண்டுதல் பண்புகளுக்கு, அதிலுள்ள சேர்மமான கேப்சைசினே காரணம். சிறிய அளவில் அதை எடுத்துக்கொள்ளும் போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்; ரத்த ஓட்டம் மேம்படும்.

ஆனால் அதிகமாகவோ அல்லது அடிக்க டியோ உட்கொள்வது அதிக தீங்கு விளைவிக் கும். மிளகாய்ப் பொடியை அதிகமாக உட்கொள்வது செரிமான எரிச்சல், ஆசிட் ரிப்ளஸ் மற்றும் உணர்திறன் மிக்க நபர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப் பட்டுள்ளது. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்...

காரத்தின் வெப்பம் உடலின் வெப்ப நிலையை அதிகரித்து வியர்வையை அதிகமாக வெளியேற்றும். இதை நீச்சத்து இழப்புக்கு வழி வகுத்து, உடலில் பல பிரச்னைகளை ஏற் படுத்தலாம். மேலும், காரம் சில மருந்துகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அதிக காரம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான காரம் வயிறு அமிலத்தை அதிகரித்து நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஏற்கனவே வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாக மாறலாம்.

காரம் குடலின் உள்அடுக்கை எரிச்சலடையச் செய்து வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். சிலருக்கு அதிக காரம் மலச்சிக்கலை ஏற்படுத்தி, குடலின் இயக்கத்தை மெதுவாக்கி மலம் கழிப்பதைக் கடினமாக்கும்.

அதிகப்படியான காரம் தோளில் அரிப்பு, சிவப்பு தன்மை மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக முகத்தில் காரம் பட்டால் முகப்பருக்கள் அதிகரிக்கலாம்.

சிலருக்கு தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரமும் காரணமாக இருக்கலாம். இது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்து தலை வலிக்கு காரணமாக அமையும். மேலும், அதிகமாக காரம் சாப்பிடுவது வாய்ப்புண் மற்றும் நாக்கு எரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். சில ஆய்வுகளில் படி அதிகப்படியான காரம் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும் என கண்டறியப் பட்டுள்ளது.

Advertisement