ராகுகாலம் முடிந்ததும் மாலையில் பொறுப்பேற்றார்

1

 மீண்டும் அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி, தலைமை செயலகத்தில் நேற்றிரவு பொறுப்பேற்றார். நேற்று மாலை 4:30 முதல் 6:00 மணி வரை ராகுகாலம். அதன்பின், செந்தில் பாலாஜி தலைமை செயலகம் வந்தார். ஏற்கனவே, தான் அமைச்சராக இருந்த அறையிலேயே, மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். மற்ற அமைச்சர்கள் இன்று தலைமை செயலகம் வர உள்ளனர்.

 துணை முதல்வரான உதயநிதியின் இல்லத்தில், அமைச்சர் என குறிப்பிடப்பட்டு இருந்த பெயர் பலகை மாற்றப்பட்டு, துணை முதல்வர் என்று எழுதப்பட்ட புதிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement