இது நல்லாயிருக்கே! தி.மு.க. அமைச்சரை கொண்டாடும் அ.தி.மு.க. 'மாஜி' அமைச்சர்!

சென்னை; உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் பாராட்டி உள்ளார்.



தமிழக அமைச்சரவை தற்போது மாற்றப்பட்டு உள்ளது. 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களில் 2 பேர் புதியவர்கள். ஒருவர் கோவி. செழியன். மற்றொருவர் பனமரத்துப்பட்டி ஆர். ராஜேந்திரன். இவர்களில் கோவி. செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில், அமைச்சர் கோவி. செழியனை பாராட்டி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைகைச்செல்வன். அவர் தனது பதிவில் கூறி உள்ளதாவது;

நானும் திரு.கோவி. செழியன் அவர்களும் ஒரே நாளில் 'முனைவர்' பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன். இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி பாராட்டாமல் இருக்க முடியுமா..?

இவ்வாறு வைகைக்செல்வன் தமது பதிவில் கூறி உள்ளார்.

Advertisement