வரும் கூட்டத்தொடரில் வக்பு மசோதா: உறுதி அளித்தார் அமித் ஷா

3

குர்கான்: "வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், வக்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்," என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட கூறினார்.


ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பத்ஷாபூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
வக்பு வாரிய சட்டம், வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில், மசோதா தாக்கல் செய்ய உள்ளோம். இத்துடன் வாரியம் கோரியபடி, நிதிப்பகிர்வுக்கும் அனுமதி அளிக்கபட உள்ளது.
இம்மசோதா தொடர்பாக, வக்பு வாரிய பிரதிநிதிகள் கூறும் குற்றச்சாட்டுளை ஏற்க முடியாது. ஆய்வுக்கமிட்டி தலைவராக உள்ள பா.ஜ..,வின் ஜெகதாம்பிகா பால், மசோதா குறித்து முழு விபரத்தையும் ஆய்வு செய்து வருகிறார்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement