பத்திரப்பதிவுக்கு வக்பு தடை ஹிந்து முன்னணி போராட்டம்

திருநெல்வேலி:திருநெல்வேலி, பழைய பேட்டையில் ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியில் பத்திரப்பதிவு மேற்கொள்ளவும், புதிய மின் இணைப்பு வழங்கவும், வக்பு வாரிய தலையீட்டால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறி, ஹிந்து முன்னணியினர் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய பேட்டையில், ஐந்து தலைமுறைகளாக வசித்து வரும் 2,000க்கும் மேற்பட்டோரின் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள அரசு துறைகள் மறுக்கின்றன. வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்று பெற கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இது தொடர்பாக, தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையில் நடந்த பேச்சில், முடிவு எட்டவில்லை. எனவே நேற்று, பழையபேட்டை பரிவேட்டை மடம் முன் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலர் குற்றாலநாதன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Advertisement