துணை முதல்வர் Vs துணை முதல்வர்; உதயநிதிக்கு பவன் கல்யாண் 'பொளேர்'

22

திருப்பதி: ''சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள்,'' என தமிழக துணை முதல்வர் உதயநிதியை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.


கடந்த ஆண்டு செப்., மாதம் சென்னையில் நடந்த மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி( அப்போது அமைச்சராக மட்டும் இருந்தார்) பேசும்போது, ' மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ' என்றார். இது பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. பா.ஜ.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது.



இந்நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது: சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. ஆனால், நீங்கள் அழிந்து போவீர்கள். சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதசார்பின்மை ஆகாது.
அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர், வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார். சனாதனத்தை தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் தான் அழிந்து போவார்கள். இவ்வாறு உதயநிதியை, பவன் கல்யாண் மறைமுகமாக தாக்கி பேசினார்.

Advertisement