பெண்கள் மாயம்

அரியாங்குப்பம்: இரு வேறு இடங்களில் காணாமல் போன இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் டோல்கேட், அரவிந்தன் நகரை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி பிச்சையம்மாள், 54. அரியாங்குப்பம் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் துடைப்பம் விற்க சென்றவரை காணவில்லை. புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாஸ்பேட்டை, கென்னடி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீமோன் மகள் ஜெனிபர், 22; புதுச்சேரியில் ஐஸ் கிரீம் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement