பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சிக்கினார்

திருவல்லிக்கேணி,
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 22 வயது பெண், கடந்த 1ம் தேதி தன் கணவருடன், திருவல்லிக்கேணியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். அங்கு, திருநங்கையான தன் தம்பியின் மொபைல்போனில் வந்த அழைப்பை எடுத்து பேசிய போது, மறுமுனையில் ஆகாஷ் என்பவர், ஆபாசமாக பேசியுள்ளார். உடனே, அப்பெண் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், தன் தம்பி விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து, அவ்வழியாக நடந்து சென்ற அப்பெண் மற்றும் அவரது கணவரை, கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரை விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட பல்லவன் சாலை, காந்தி நகர், 'டி பிளாக்'கை சேர்ந்த ஆகாஷ், 20, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர். விக்னேஷை தேடி வருகின்றனர்.

Advertisement