காஞ்சிபுரம் சங்கரமடத்தில் 108 சுவாசினி பூஜை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நவராத்திரியையொட்டி உலக மக்கள் நன்மைக்காக 108 சுவாசினிகள், 108 கன்னிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில், சுவாசினிகளும், கன்னிகளும் அமர வைக்கப்பட்டு, புத்தாடை, மலர்மாலை, பூஜைப்பொருட்கள் ஆகியன சமர்ப்பித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர், காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானீகர் சுரேஷ் சாஸ்திரி,வெங்கடேஷ் சாஸ்திரி, ஸ்ரீதர் சாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாட்கள் சுவாசினி பூஜை மற்றும் கன்னியா பூஜை நடைபெறும் என, விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement