நகை, பணத்துடன் தவறவிட்ட பை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

ஓமலுார்: நகை, பணத்துடன் தவற விட்ட கைப்பையை, ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக்கொடுத்தனர்.


காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி காட்டுவளவை சேர்ந்த, சரவணன் மனைவி கலையரசி, 32. நேற்று மதியம், 2:40 மணிக்கு, பண்ணப்பட்டி பிரிவு சாலையில் இருந்து மொபட் மூலம் வீட்டுக்கு சென்றார். அப்போது மொபைல் போன், 7.5 பவுன் நகைகள், 4,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றுடன் இருந்த கைப்பையை தவறவிட்டார். வீட்டுக்கு சென்றபின் பை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தார்.எஸ்.ஐ., பிரசாந்த் உள்ளிட்ட போலீசார், மொபைல் போன், 'லைவ் லோகேஷன்' போட்டு சென்றபோது, பண்ணப்பட்டி பிரிவு சாலையில் உள்ள ஓட்டலில் பை இருந்தது. விசாரித்த-போது, கீழே கிடந்ததாக ஒருவர் எடுத்துக்கொடுத்ததாக, ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். பையை மீட்ட போலீசார், கலையரசி-யிடம் ஒப்படைத்தனர். ஓட்டல் ஊழியர்களின் நேர்மையை பாராட்டி, இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், வெகுமதி வழங்கினார். மேலும் தவறவிட்ட பையை, ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசாரை, மக்கள் பாராட்டினர்.

Advertisement