120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெயின்டர் மீட்பு
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூரை சேர்ந்தவர் மணி, 32. பெயின்-டரான இவர் நேற்று, அதே பகுதியில் உள்ள வையாபுரி என்பவ-ரது விவசாய கிணற்றின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கிணற்றில் தவறி விழுந்தார். 120 அடி ஆழம், 30 அடி தண்ணீர் கொண்ட கிணற்றில் விழுந்தது குறித்து, மதியம், 1:00 மணிக்கு கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலை-மையில் வீரர்கள், வலை மூலம் மணியை, ஒரு மணி நேரத்துக்கு பின் சிறு காயத்துடன் மீட்டனர். பின் மணியை, தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். கெங்கல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement