காய்ச்சலுக்கு மாணவி பலி

தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கணக்குப்பட்டி பிரிவை சேர்ந்தவர் ரத்தினசாமி, 45. இவரது மகள் ஜீவிதா, 15. தாரமங்-கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்.

அவ-ருக்கு ஒரு வாரத்துக்கு முன் காய்ச்சல் அதிகம் இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காய்ச்-சலால், தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து நேற்று காய்ச்சல் அதிகமாக ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்ட-தாக தெரிவித்தனர். ரத்தினசாமி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement