போக்குவரத்து விதிமீறல் 1,165 வழக்குகள் பதிவு


போக்குவரத்து விதிமீறல்
1,165 வழக்குகள் பதிவு
ஈரோடு, அக். 4-
ஈரோடு மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த மாதம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 38 வழக்கு, சிக்னலை மீறியதாக, 56 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாததாக, 535 வழக்கு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 111 வழக்கு, உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக, 21 வழக்கு, காப்பீடு இல்லாதது, 104 வழக்கு என, 1,165 வழக்குகள் பதிவு செய்து, வாகன உரிமையாளர்களிடம் அபராதமாக, 3.௪௨ லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
குடிபோதையில் வாகனம் இயக்கிய, 15 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தனர்.

Advertisement