சாதித்தவர்களுக்கு தமிழ்ச்சங்கம் விருது

வடமதுரை: அய்யலுாரில் வடமதுரை தமிழ்ச்சங்கம் சார்பில் காந்திஜெயந்தியை முன்னிட்டு தேசம் காப்போம் தலைப்பில் மத நல்லிணக்க பொதுக்கூட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பாதர்வெள்ளை முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ரஞ்சித்குமார் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ஜீவி, பேரூராட்சி தலைவர் கருப்பன், தி.மு.க., நகர செயலாளர் கணேசன், காங்., வட்டாரத் தலைவர் ராஜரத்தினம், நகர தலைவர் அண்ணாமலை, வர்த்தக சங்க தலைவர் ஆறுமுகம், கவிஞர் பிலிப்சுதாகர், முன்னாள் கவுன்சிலர் சம்சுதீன் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Advertisement