தடுப்பணைகள் திறப்பு
திருப்பூர் : தாராபுரம் அருகே, அமராவதி ஆற்றில் 22.62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய இரு தடுப்பணைகள் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
தாராபுரம் அடுத்த மாம்பாடி ஊராட்சி மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில், அமராவதி ஆற்றின் குறுக்கில், இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 22.62 கோடி ரூபாய்.
தடுப்பணைகளை நேற்று கணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு, தடுப்பணை வழியாக தண்ணீர் திறந்து வைத்து, மலர்களை துாவி வரவேற்றார்.
தாராபுரம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement