கஞ்சா விற்றதாக கல்லுாரி மாணவருடன் நண்பர் கைது

நாகர்கோவில்: தமிழகம் -- கேரளா எல்லையான கொல்லங்கோடு பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மேடவிளாகம் அருகே, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களை சோதனையிட்டத்தில்கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கொல்லங்கோடு அருகே கேரளாவைச் சேர்ந்த நோபிள், 22, சூசைபுரத்தைச் சேர்ந்த அவரது நண்பர் மிஜின், 19, என்பது தெரிந்தது.

நோபிள் ஐ.டி.ஐ., முடித்து, மீன்பிடி தொழில் செய்து வந்தார். மிஜின், அப்பகுதி கல்லுாரியில் முதலாண்டு இளங்கலை படிக்கிறார். எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர் என்பது பற்றி, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement