பள்ளி வகுப்பறை, கழிப்பிட பராமரிப்பு * ரூ.2.25 கோடியில் 49 பணிகள்   

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள பள்ளி வகுப்பறை, கழிப்பிட பராமரிப்பு என ரூ.2.25 கோடியில் 49 பணிகளை செய்வதென ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்பட்டன.

இந்த ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளின் வகுப்பறை மற்றும் கழிப்பிட பராமரிப்பிற்கென ரூ.2.25 கோடிக்கென 49 பணிகளுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. கடந்த முறை ஒப்பந்த புள்ளிகள் கோரியதில், ஒப்பந்ததாரர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதால், டெண்டரை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் டெண்டர் நடத்த முடிவு செய்து, நேற்று 49 பணிகளுக்கென தனித்தனியாக ஒப்பந்த தொகைகள் வீதம் ரூ.2.25 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் செய்வதென முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒப்பந்ததாரர்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டன. இன்று மாலை 4:30 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் டெண்டர் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் உள்ளவர்களுக்கு பணி செய்வதற்கான உத்தரவு வழங்குவது என சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Advertisement