ரயிலில் ஏறியபோது 'ஷாக்' படுகாயம் அடைந்தவர் பலி


ரயிலில் ஏறியபோது 'ஷாக்'
படுகாயம் அடைந்தவர் பலி
சேலம், அக். 10-
சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், 6, 7வது நடைமேடைகளில், சரக்கு ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. அங்கு கடந்த, 27ல், 7வது லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் பகுதிக்கு சென்ற ஒருவர், திடீரென ரயில் மீது ஏறினார், அப்போது ரயிலுக்கு மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். உடனே தொழிலாளர்கள், அவரை மீட்டனர். பின் ரயில்வே போலீசார், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் ஜாகீர் சின்னம்மாபாளையம், வீரபாண்டியார் நகரை சேர்ந்த மோகன், 26, என தெரிந்தது. ஆனால் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ரயில்வே போலீசார் வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement