கத்தியால் குத்துப்பட்ட மாணவர் கவலைக்கிடம்


கத்தியால் குத்துப்பட்ட
மாணவர் கவலைக்கிடம்
தலைவாசல், அக். 10-
தலைவாசல், மும்முடியை சேர்ந்த, டிரைவர் ராஜ்குமார் மகன் கிருபாநாத், 18. இவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவரது, 17 வயது தம்பி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம் சகோதரர்கள் இடையே பிரச்னை எழுந்தது. அதில் கிருபாநாத், கத்தியால் தம்பி தொண்டையில் குத்தினார். பின் கிருபாநாத், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தம்பி படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர், மிக கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement