தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


தேங்காய் விலை உயர்வு
விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம், அக். 10-
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், தேங்காய் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், கட்டளை, வீரராக்கியம், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், சிந்தலவாடி, லாலாப்பேட்டை, வல்லம், கொம்பாடிப்பட்டி, புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் தேங்காய் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, தேங்காய் வரத்து காரணமாக விலை உயராமல் இருந்தது. தற்போது வரத்து சரிவு மற்றும் விழா கால பண்டிகை துவங்குவதால், தேங்காய் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மாதம் சிறிய தேங்காய் ஒன்று, எட்டு ரூபாய்க்கு விற்றது. தற்போது விலை உயர்ந்து தேங்காய் ஒன்று, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரிய தேங்காய் ஒன்று, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement