ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை: சிவகங்கை கூட்டுறவு ஆட்சேர்ப்பு நிலையம் மூலம் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 36 விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் 8, தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள ரேஷன் கடையில் 27, தொடக்க கூட்டுறவு பண்டகசாலையில் 1 பணி என 36 விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை https:/www.drbsvg.net இணையதளத்தில் மட்டுமே நவ., 7 மாலை 5:45க்குள் விண்ணப்பிக்கவும்.

இதில் பொது பிரிவுக்கு 11, பிற்பட்ட வகுப்பிற்கு 10, பிற்பட்ட வகுப்பு (முஸ்லிம்) 1, மிக பிற்பட்டோர், சீர்மரபினருக்க 7, ஆதிதிராவிடருக்கு 5, அருந்ததியினர், பழங்குடியினருக்கு தலா 1 பதவி என வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.150. ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

நுழைவு சீட்டில் தெரிவித்தபடி அந்நாளில் நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களை பெற 88383 27218ல் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement