புகார் கூறியவருக்கு 'ஷாக்' தந்த மின் ஊழியர்

சோழவந்தான்: மேலக்கால் ஊராட்சி கீழமட்டையான் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சில நாட்களாக காலையில் 3 முதல் 4 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.

இதனால் குடிநீர், சமையல் வேலை பாதிக்கிறது. பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குடும்ப தலைவிகள் சிரமப்படுகின்றனர். மின் ஒயர்களில் உரசும் மரங்கள், விழும் மட்டைகளால் மின்சாரம் தடை படுகிறது. இவ்விஷயத்தில் மின்வாரியம் பராமரிப்பு பணிகளை பெயரளவில் செய்வதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.

சிவா: காலை நேரங்களில் தொடரும் தொடர் மின்தடை குறித்து ஒயர் மேனிடம் கேட்டால் கிராமத்தை காலி செய்து மதுரை சிம்மக்கல் பகுதிக்கு சென்றால் மரம் மட்டைகளால் மின்தடை ஏற்படாது என்கிறார். இந்த ஆடியோவை வைத்து மின்வாரியத்தில் புகார் தெரிவித்துள்ளேன் என்றார். மின்வாரியம் விசாரிக்கிறது.

Advertisement