கோபியில் டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோபி, அக். 15-
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் மற்றும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள, டாஸ்மாக் குடோன் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். பி.ப்., இ.எஸ்.ஐ., வசதியை முறைப்படுத்த வேண்டும். மது விற்பனையை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
கோஷமிட்டனர்.

Advertisement