டேவிஸ் கோப்பை: இந்தியா அபாரம்

புதுடில்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றனர்.

டில்லியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1, 'பிளே-ஆப்' சுற்று போட்டி நடக்கிறது. இதில் இந்தியா, டோகோ அணிகள் விளையாடுகின்றன. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், டோகோவின் லியோவா அயிட் அஜாவோன் மோதினர். அபாரமாக ஆடிய சசிகுமார் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், டோகோவின் தாமஸ் செடோட்ஜி மோதினர். இதில் அசத்தலாக ஆடிய ராம்குமார் 6-0, 6-2 என வெற்றி பெற்றார்.
இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இன்று இரட்டையர், மாற்று ஒற்றையர் பிரிவு போட்டி நடக்கவுள்ளன. இரட்டையரில் இந்தியா சார்பில் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் சவுத்தரி ஜோடி களமிறங்குகிறது.

Advertisement