தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ராமேஸ்வரம்:
-விடுமுறை நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தின் பல பகுதியில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயிலில் தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பயணிகள் குவிந்தனர். இங்குள்ள அழகிய கடற்கரை, கடல் அலையின் அழகை கண்டு ரசித்தனர்.இக்கடலின் ஆபத்தை உணராமல் பெரும்பாலானோர் அதில் குளித்து விளையாடினர்.
அரிச்சல்முனை கடற்கரையில் பார்க்கிங் வசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் பயணிகள் வாகனங்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement