வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
உளுந்துார்பேட்டை : வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் அருகில் உள்ள எஸ்.எஸ்.ஐ., வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கிழக்கு கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் பர்ஷித், 47; மொபைல்போன் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்தார்.
நேற்று காலை பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில இருந்த 2 கிராம் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
மேலும், அதே தெருவில் உள்ள எலவனாசூர்கோட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கும் திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.