பிப்.11,12,16ல் மீண்டும் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவிழ்க்க முடியவில்லை என கிழக்கு தொகுதி, சோழவந்தான் தொகுதி காளைகள் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதற்கு அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரு தொகுதிக்கு போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி பிப்.,11,12ல் கிழக்கு தொகுதி, 16ல் சோழவந்தான் தொகுதி காளைகளுக்கு போட்டி நடக்கிறது.

இதற்கான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் அய்யாசாமி, பேரூராட்சி தலைவர்கள், தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் பிப்.23ல் ஒரு போட்டி நடத்த வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement