இரு நாட்கள் வரி செலுத்த முடியாது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853808.jpg?width=1000&height=625)
கோவை: சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், யு.டி.ஐ.எஸ்., மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான பராமரிப்பு பணி 15ம் தேதி, 16ம் தேதி நடைபெறுகிறது. அதனால், யு.டி.ஐ.எஸ்., இணைப்பு 14ம் தேதி இரவு, 8:00 மணி முதல் இயங்குவது நிறுத்தப்படும்.
கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்கள் மற்றும் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து வரி வசூல் மையங்களிலும் வரி வசூல் பணி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் 14ம் தேதி இரவு, 8:00 மணி முதல், 16ம் தேதி வரை தற்காலிகமாக செய்ய முடியாது; பொதுமக்கள் வரியினங்கள் செலுத்த முடியாது என, கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement