திருக்குறள் போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையம் ஜான்சிராணி அரசு தொடக்க பள்ளியில், குரும்பாபேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்கம் சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

தலைமை ஆசிரியை இந்திரா தலைமை தாங்கினார். ஆசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார். சங்க கவுரவ தலைவர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். தலைவர் முருகவேல் ரமேஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் ரகுராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆலோசகர் செந்தில்குமரன் சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை மோகனா நன்றி கூறினார். ஆசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.

Advertisement