சாலை மறியல் முயற்சி
அரியாங்குப்பம்: தேசிய ஊரக வேலைப்பணியை முழுமையாக வழங்க வலியுறுத்தி, சாலை மறியல் செய்ய முயன்ற, பொது மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்
மணவெளி தொகுதியில், தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் நடக்கிறது. அதில், தவளக்குப்பம், இடையார்பாளையம், நாணமேடு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களுக்கு 100 நாட்கள் வேலையை முழுமையாக கொடுக்காமல், குறைந்த நாட்கள் கொடுப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே நேற்று காலை 10:30 மணிக்கு இடையார்பாளையம் பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள், தொடர்ந்து 100 நாட்கள் வேலையை கொடுக்க வேண்டும் என, புதுச்சேரி - கடலுார் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து வந்த தவளக்குப்பம் போலீசார், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்
-
தண்ணீர்குளம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
-
தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் 28ல் சென்னை வருகிறார்
Advertisement
Advertisement