பயணியர் உள்பட 2 ரயிலில் கரூர் - ஈரோடு சேவை ரத்து
சேலம்: ஈரோடு - கரூர் தடத்தில் உள்ள பசூர் - ஊஞ்சலுார் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும், 20(நாளை), 23, 25, 28 ஆகிய நாட்களில் காலை, 7:20க்கு புறப்படும் திருச்சி -ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மேற்கண்ட நாட்களில் அதிகாலை, 5:10க்கு கிளம்பும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் மேற்கண்ட நாட்களில் இயக்கப்படும் ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், கரூரில் இருந்து புறப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பண்ருட்டியில் போராட்ட ஆயத்த மாநாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
-
கும்மிடி கலைமகள் பள்ளி கலை பண்பாட்டு விழா
-
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
-
பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களால் நெரிசல்
-
இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்
-
டில்லி பெண்களுக்கு மார்ச் 8 முதல் கிடைக்கும் ரூ.2,5-00! முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா அறிவிப்பு
Advertisement
Advertisement