ஓடும் பஸ்சில் திருடிய4 பெண்கள் கைது


ஓடும் பஸ்சில் திருடிய4 பெண்கள் கைது

சேலம்:சேலம் கருப்பூர், குஞ்சம்மாள் தெருவை சேர்ந்தவர் மங்கையர்கரசி, 47. நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கருப்பூருக்கு, டவுன் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். கரும்பாலை அருகே சென்றபோது, அவரை, 4 பெண்கள் இறங்கவிடாமல் சுற்றி வளைத்து நெருக்கினர். தொடர்ந்து அவரிடமிருந்து மொபைல் போன், 500 ரூபாயை திருடினர். இதை கவனித்த மங்கையர்கரசி கூச்சலிட்டார். உடனே பயணியர், 4 பெண்களையும் சுற்றிவளைத்து, கருப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திருச்செந்துாரை சேர்ந்த தேவி, 45, துாத்துக்குடி நாகேஸ்வரி, 36, ராஜேஸ்வரி, 29, கலை, 39, என்பதும், பஸ்சில் கூட்டத்தை ஏற்படுத்தி, பணம், நகையை பறித்து வந்ததும் தெரிந்தது. இதனால், 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement