'மும்மொழி கொள்கையால் தமிழ் காணாமல் போகாது'

சங்ககிரி: பா.ஜ.,வின் சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், சங்ககிரி, குப்பனுாரில் நேற்று நடந்தது. அதில் மாவட்ட தலைவராக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஹரிராமன், நிர்வாகி

களிடம் அறிமுகப்படுத்தி கொண்டு பேசியதாவது:தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்பதால், தமிழ் காணாமல் போகாது.

பாரதியாரே, 18 மொழிகளை கற்றுள்ளார். சேலம் மாம்பழத்தை, 10 மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இந்தி தெரிந்-ததால் தான் அந்த வியாபாரத்தை செய்கிறேன். வரும், 2026 சட்-டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற கட்சி-யினர் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சங்ககிரி புது மண்டல தலைவர் தனபால், சேலம் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் சுதிர்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட செயலர் ரமேஷ்-கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஹரிராமன் சித்தர்-கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு நல்லணம்-பட்டியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின் பொறுப்பாளர் அறிமுக விழா நடந்தது. இடங்கண-சாலை மண்டல தலைவர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்-றனர்.

Advertisement