கால்பந்து: இந்தியா தோல்வி

சார்ஜா: 'பிங்க் லேடீஸ்' கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-2 என, ரஷ்யாவிடம் தோல்வியடைந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான 'பிங்க் லேடீஸ்' கோப்பை கால்பந்து 2வது சீசன் நடக்கிறது. இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், ரஷ்யா என 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் உலகத் தரவரிசையில் 27 வது இடத்திலுள்ள ரஷ்யாவை எதிர்கொண்டது.
போட்டியின் 25வது நிமிடத்தில் ரஷ்யாவின் கிளாபிரா முதல் கோல் அடித்தார். அடுத்து போட்டியின் கடைசி ஸ்டாப்பேஜ் நேரத்தில் (92வது) வேலன்டினா ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
நாளை தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை சந்திக்க உளளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு
-
ஓடும் ரயிலில் நகை திருடிய போலீஸ்; 'டிவி' நடிகை வாக்குமூலம்
-
புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி; 2,000 பழைய பெர்மிட்தாரர்கள் கோரிக்கை
-
பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை
-
பழங்குடி இன சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
-
உடல் பருமன் தடுப்பு பிரசாரம்; 10 பேரை பரிந்துரைத்த மோடி
Advertisement
Advertisement