புதன்சந்தை மாட்டுச்சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்


புதன்சந்தை மாட்டுச்சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்


புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அருகே, புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. ‍அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம், திருமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்திருந்ததால், மாடுகள் விற்பனை அதிகரித்தது. இதனால், 2.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement