தேசிய வேளாண் சந்தையில்ரூ.32,000க்கு தேங்காய் ஏலம்

ப.வேலுார்:ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 2,550 தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். அதிகபட்சம் கிலோ, 55 ரூபாய், குறைந்த
பட்சம், 41.14 ரூபாய், சராசரி, 49.49 ரூபாய் என, மொத்தம், 32,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


********************

Advertisement