தேசிய கருத்தரங்கம்

காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் வணிக கணினி பயன்பாட்டியியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. செயலர் சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா அம்பா வாழ்த்தினர்.

முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி தலைமையேற்றனர். வணிக கணினி பயன்பாட்டியியல் துறை தலைவர் அடைக்கம்மை வரவேற்றார்.

கோயம்புத்தூர் தொழில்நுட்ப அமர்வு, எஸ்.பி.ஐ இணை மேலாளர் நித்யா தொழில் நிர்வாக நுட்பம் குறித்து பேசினார்.

கோயம்புத்தூர் ஐ.ஓ.பி., மேலாளர் சோமசேகர் நுண்ணறிவு மற்றும் இணைய மோசடி குறித்து பேசினார்.

Advertisement