கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகல்

கராச்சி: இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பட்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ல் இங்கிலாந்து ஒருநாள், 'டி-20' அணியின் கேப்டனாக ஜோஷ் பட்லர் 34, நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி, 2022ல் 'டி-20' உலக கோப்பை வென்றது. அதன்பின், 50 ஓவர் (2023), 'டி-20' (2024) உலக கோப்பையில் சோபிக்கத்தவறியது. சமீபத்திய தொடர்களிலும் ஏமாற்றிய இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இன்று கராச்சியில் நடக்கும் லீக் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியுடன் இங்கிலாந்து ஒருநாள், 'டி-20' அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பட்லர் தெரிவித்தார்.
இதுகுறித்து பட்லர் கூறுகையில், ''கேப்டன் பொறுப்பில் இருந்து விலக, சரியான நேரமாக கருதுகிறேன். இத்தொடர் எனது கேப்டன் பதவிக்கு முக்கியமானதாக இருந்தது. எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால், விலக முடிவு செய்தேன்,'' என்றார்.
மேலும்
-
போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 6ல் ஊர்வலம்
-
ஓய்வு நாளில் பணப்பலன் வழங்காததை கண்டித்து குடும்பத்துடன் ஊழியர் போராட்டம்
-
புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
-
வழக்கின் எப்.ஐ.ஆர்.,கள் மாயமான பிரச்னை கண்காணிப்பு அதிகாரி நியமிக்க கோர்ட் உத்தரவு
-
வன உரிமை சட்டத்தை குறைந்த அளவில் செயல்படுத்திய மாநிலம் தமிழகம் பட்டா கோரிய 45,000 மனுக்கள் தள்ளுபடி
-
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்