மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
திருப்பத்துார்: குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துாரைச் சேர்ந்தவர் ரமேஷ், 53; ஆட்டோ டிரைவர். இவரது இரண்டாவது மனைவி தீபா, 35. இவர், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள கணவரின் தங்கை வரலட்சுமி வீட்டிற்கு துாங்கச் சென்றார்.
அப்போது, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ரமேஷ், கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே, தீபா பலியானார். திருப்பத்துார் டவுன் போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement