கல்லுாரி பஸ்சில் பாம்பு வடலுாரில் பரபரப்பு

கடலுார் : கல்லுாரி பஸ்சில் புகுந்த பாம்பை, ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
குறிஞ்சிப்பாடி தனியார் கல்லுாரி மாணவிகள், நேற்று வடலுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லுாரி பஸ்சில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் கல்லுாரிக்கு திரும்புவதற்காக மாலை 3:30மணியளவில் மாணவிகள் பஸ்சில் ஏறினர். அப்போது பஸ்சிற்குள் நல்லப்பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து மாணவிகள் அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் விரைந்து வந்து பஸ்சில் பதுங்கியிருந்த நல்லப்பாம்பை, ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகங்கையில் இயற்கை சந்தை
-
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
-
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா துவக்கம்
-
நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவை வைத்த அரசு கட்டடமும் தப்பல! ஜப்தி நோட்டீஸ் வழங்கி அதிகாரிகள் நடவடிக்கை
-
ஆவணம் இன்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
-
குமாரபாளையம் நகர பா.ஜ., ஆபீஸ் திறப்பு
Advertisement
Advertisement