குளத்தில் மீன் பிடித்த தொழிலாளி பலி
ஆவடி:அடுத்த பாலவேடு, கரணம் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவி, 38. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று மாலை 4:00 மணியளவில், பாலவேடு, இந்திரா நகரில் உள்ள சிறிய குளத்தில் பாபு மீன் பிடிக்க சென்றார்.
வெகு நேரமாக வீடு திரும்பாததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருவூர் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி, இரண்டரை அடி ஆழமுள்ள குளத்தில் இருந்து பாபுவின் உடலை மீட்டனர்.
ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மழை பெய்தால் சகதிகாடாக மாறும் ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம் மணிநகர் குடியிருப்போர் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
-
தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்
-
பெரியகுளம் தொகுதியில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
-
ராஜ்யசபா 'சீட்' மறுப்பு: பிரேமலதா அதிர்ச்சி
-
விரிவாக்க மையங்களில் விதை, உரம் தர ஆய்வு
-
கண்ணகி கோயிலுக்கு ரோடு அமைக்கும் பிரச்னைக்கு தீர்வாகுமா: விழாவிற்கு முன் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல்
Advertisement
Advertisement