'ஒலிம்பியாடு' கோப்பை போட்டி கற்பகம் பல்கலை சாம்பியன்

கோவை:சென்னையில் நடந்த 'ஒலிம்பியாடு' கோப்பைக்கான வாலிபால் போட்டியில், கற்பகம் பல்கலை அணி சாம்பியன்ஷிப் வென்றது.
சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கலை அறிவியல் கல்லுாரியில், 'ஒலிம்பியாடு' கோப்பைக்கான வாலிபால் போட்டி, இரு நாட்கள் நடந்தது. இதில், தமிழகத்தின் சிறந்த எட்டு கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன.
லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடந்தது. அரையிறுதி போட்டியில் பனிமலர் பொறியியல் கல்லுாரி அணியை, 3-2 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி வென்றது. தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில், லயோலா அணியை எதிர்கொண்டது. பரபரப்பான ஆட்டத்தில், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கற்பகம் பல்கலை முதல் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணியினரை, கற்பகம் கல்வி குழும தாளாளர் வசந்தகுமார், முதன்மை கல்வி இயக்குனர் முருகையா, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.