மாணவியை சீண்டிய பெரியப்பா கைது
ஓமலுார்: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த சிறுமி, காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளார். அண்மையில் உறவினர் வீட்டுக்கு செல்ல அச்சமாக இருப்பதாக, பள்ளியில் தெரிவித்துள்ளார்.
விசாரித்தபோது, 2 பேர் தவறாக நடந்து கொண்டது தெரிந்தது. உடனே குழந்தைகள் உதவி எண்ணில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர் விசாரித்தார்.
தொடர்ந்து ஓமலுார் மகளிர் போலீசார், கடந்த பிப்., 13ல், சேலம், பனங்காட்டை சேர்ந்த, சிறுமியின், 45 வயதுடைய பெரியப்பா, அண்ணன் உறவுமுறையை சேர்ந்த, 20 வயது வாலிபர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்தனர். நேற்று பெரியப்பாவை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement