குழாயில் உடைப்புவீணாகும் தண்ணீர்


குழாயில் உடைப்புவீணாகும் தண்ணீர்


குளித்தலை:குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில், காவிரி நகர் பிரதான சாலையில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி செல்கிறது.
குளித்தலை நகராட்சி சார்பில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தின் மூலம், அனைத்து குடியிருப்புகளுக்கும் காவிரி குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையிலும், காவிரி நகர் பிரதான சாலையிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி செல்கிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement