வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர்
வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர் இடமாற்றம்
ஆத்துார்:சேலம் மாவட்டத்தில் இரவில் வாகன தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். அப்போது ஆத்துார் சப்-டிவிஷனில், மல்லியக்கரை, தம்மம்பட்டி, வீரகனுார் ஆகிய இடங்களில், இரவு நேர தணிக்கையில் ஈடுபடாதது தெரிந்தது. இதனால் தனிப்படையினர், எஸ்.பி., கவுதம் கோயலுக்கு அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து வீரகனுாரில் எஸ்.எஸ்.ஐ., நாராயணன், முதல்நிலை போலீஸ்காரர் இளங்கோ; தம்மம்பட்டியில் ஏட்டு சரவணன், முதல்நிலை போலீஸ்காரர் ராஜா; மல்லியக்கரை எஸ்.எஸ்.ஐ., செல்வராஜ், ஏட்டு சின்னையன் ஆகியோரை, சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டி.என்.சி.ஏ., கிரிக்கெட் போட்டி எழும்பூர் மனமகிழ் அணி வெற்றி
-
மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
-
ரூ.8.50 லட்சம் போதை பொருளுடன் ஐ.டி., ஊழியர்கள் 5 பேர் சிக்கினர்
-
மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் 169 பேர் மீது வழக்கு பதிவு சாலை பணியின்போது தடுப்பு கட்டாயம்: டி.எஸ்.பி.,
-
ஆரோவில்லில் 'ஷோ ஜம்பிங்' குதிரையேற்ற போட்டி
-
கை விரல் ரேகை பதிவில் தொடர் சிக்கல் ரேஷன் பொருள் வினியோகம் தாமதம்
Advertisement
Advertisement