கல்லுாரி மாணவியரின் கலை அழகு மிக்க புகைப்படங்கள்




சென்னையில் உள்ள எம்ஒபி வைஷ்ணவ மகளிர் கல்லுாரி விஷ்வல் கம்யூனிகேஷன் பிரிவின் சார்பில் 12 வது முறையாக புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
Latest Tamil News
விஷ்வல் கம்யூனிகேஷன் பிரிவில் படிக்கும் மாணவியர் எடுத்த 300க்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
Latest Tamil News
ஆர்வம் உள்ள மாணவியர், படம் எடுப்பதற்காக இந்தியா முழுவதும் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் பயணம் சென்றுள்ளனர்.
Latest Tamil News
இலங்கையை இவர்கள் எடுத்துள்ள கோணங்கள் வியக்கவைக்கிறது,வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் எடுத்துள்ள படங்கள் பிரமிக்க வைக்கிறது,ஏர்ேஷாவினை இப்படி எல்லாம் எடுக்கமுடியுமா? என்று வியக்குமளவிற்கு படம் எடுத்துள்ளனர்.
Latest Tamil News
பாசிடிவ் 2025 என்ற தலைப்பிலான இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்த்து மாணவியரை பாராட்டினர்.

Advertisement