கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது


புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடுதொட்டி உள்ளே சிறுவர்கள் சிலர் கஞ்சா புகைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் சிலரை பிடித்து, புளியந்தோப்பு விசாரித்தனர். இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த மனோஜ், 23, என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து மனோஜை பிடித்து விசாரித்த போது, அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி, 46, என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வள்ளி மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்தனர். 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement